தருமபுரி எஸ்பி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது.
இம்முகாமில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன.
இந்த பெட்டிஷன் மேளாவில், பொதுமக்களால் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த 75 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டது. மேலும், இன்றைய முகாமில் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

