மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Social Vision
Last updated: 2026/08/03 at 6:33 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஒகேனக்கல்லில் மூன்று நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் தொடக்க நாளில், அரசு துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் அரசின் பல்துறை பணிகளை விளக்கும் 23 கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களில் வீட்டிலேயே எளிதாக கலப்படத்தை கண்டறியும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

தேயிலை, தேன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம் உள்ளிட்ட அன்றாட உணவுப் பொருட்களில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது, அயோடின் கலந்த உப்பு மற்றும் அயோடின் இல்லாத உப்பை எவ்வாறு வேறுபடுத்துவது, அயோடின் சத்து உடல்நலத்திற்கு ஏன் அவசியம் என்பன குறித்து நேரடி விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஆடிப்பெருக்கு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மேலும், உணவுப் பொருள் பொதிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டிய விவரங்களான உணவுப் பொருளின் பெயர், உற்பத்தியாளர் முகவரி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, சைவ/அசைவ குறியீடு, உணவு பாதுகாப்பு உரிம எண், நுகர்வோர் தொடர்பு எண், நிகர எடை, அதிகபட்ச சில்லறை விலை  உட்பொருட்கள், ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் ஒவ்வாமை தொடர்பான தகவல்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் விரிவாக விளக்கமளித்தார். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதனுடன், சேலம் உணவுப் பகுப்பாய்வு கூடத்தின் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனம் விழா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் எல்.இ.டி. தொடுதிரை வாயிலாக காணொளிகள் காட்சிப்படுத்தி, உணவுக் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், ஒகேனக்கல் பகுதியில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் மீன் வறுவல் விற்பனை நிலையங்களில் இருந்து தேயிலை, பால், சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள், உப்பு, அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நிகழ்விடத்திலேயே தரப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களில் செயற்கை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், நான்கு மாதிரிகள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டது. அதில் மசாலாப் பொருள், பால், உப்பு மற்றும் செயற்கை நிறம் பூசப்பட்ட மீன் வறுவல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், மேம்பாட்டு அறிவிப்பு  வழங்கப்பட்டது.

கண்காட்சி அரங்கம் மற்றும் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனத்தை சுற்றுலாப் பயணிகள், அரசு அலுவலர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுகந்தபிரியா, சுற்றுலா உதவி அலுவலர் லவிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வி, செயல்அலுவலர் கீதாஞ்சலி, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், நுகர்வோர் அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பெற்றுச் சென்றனர்.

TAGGED: ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா
Social Vision August 3, 2026 August 3, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

June 10, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தருமபுரி எம்பி ஆ. மணி துவக்கி வைத்தார. 

January 6, 2025
அரசியல்

மனித நேய மக்கள்கட்சியினர் இந்திய  அரசியலமைப்பு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

November 26, 2025
சினிமா

நூற்றாண்டைக் கடந்த கோவை டிலைட் திரையரங்கம் இடிப்பு .வணிக வளாகமாக மாறுகிறது

February 7, 2024
புத்தகம் பேசினால்

அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா 

April 23, 2024
மாவட்டங்கள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 

October 29, 2025

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?