சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டுமென தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் .
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் முப்பெரும் விழா காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின்ஒன்றிய தலைவர் ஆர். தங்கம் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் ஜே. தமிழ்செல்வி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் கே. அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பொன். ஜெயக்குமார்,சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் சி. முனிரத்தினம், மாவட்ட செயலாளர் வி. ஜெயந்தி பொருளாளர் பி.மாதம்மாள் , மாவட்ட பிரச்சார செயலாளர் கே. சரிதா, மாவட்ட இணை செயலாளர் சி. செந்தாமரை, ஜே. சாவுத்திரி,மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்தி, விமலா, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஒன்றிய தலைவர்கள் தருமபுரி ஜி. வெண்ணிலா, நல்லம்பள்ளி விஜயலட்சுமி, பாலக்கோடு பூங்கொடி, பென்னாகரம் செல்வி, ஏரியூர் மாசிலாமணி, கடத்தூர் கீதா ராணி, பாப்பிரெட்டிப்பட்டி விஜயலட்சுமி, ஆகியோர் பங்கேற்றனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர்களிடம் வழங்கவேண்டும். சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவேண்டும். காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையளர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களுக்கு ஒரு சமையல் உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ 5 இலடசமும் சமையளர்களுக்கு ரூ 3 இலட்சம் என உயரத்தி வழங்க வேண்டும். உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளர் சஞ்சீவன் நன்றி கூறினார்.

