மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.
எம். எச். ஜவாஹிருல்லா
மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தருமபுரி மருந்து வணிகர் சங்க அரங்கில் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ. நியாஸ் வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முனஅனேற்க்ககழக மாவட்ட செயலாளர் டி. பி. பைரோஸ் முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் ஏ. அல்லாஹ அஹமத் தலைமை பிரதிநிதி ஒய். சாதிக் பாஷா, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் எம். நசீப்ஜான், கே. ஷாஜகான், பி. அஸ்லம் , முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏ. நசீர் அஹ்மது , இ. ஷப்பீர், பி. முகமது ரஃபி, ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எச். எம். ஜவாஹிருல்லா தெரிவித்ததாவது :
மேகதாட்டு அணைகட்டு கட்டுவது தொடர்பான பிரச்சனையில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கர்நாடக அரசின் மேகதாட்டு அணை கட்டும் முடிவில் கடை மடை பகுதியாக இருக்கும் நாகப்பட்டினம் முசிறி போன்ற பகுதிகளுக்கு காவேரி தண்ணீர் வராது என்றநிலை உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியததை தமிழக அரசு காப்பாற்றுமா என்ற கேள்வி உள்ளது. எனவே தமிழ் நாடு அரசு மேகதாட்டு அணை கட்டும் நடவடிக்கை தடுத்து பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.
ஜூலை 5 உலக சுற்றுசூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது சுற்றுசூழலை பாதுகாப்பதின் மூலம் மனிதனின் எதிர்காலத்தை பாதுகாப்பதாகும் . இந்தாண்டு இந்தியாவில் அதிக அளவு வெயில்கொளுத்துகிறது. தீடிரென கனமழை பொழிகிறது. கடல் அறிப்பு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது ஒரு காலநிலை மாற்றமாகும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் எங்கள் கட்சி மரம் நடுதல் போன்ற வேலைகளை செய்து வருகிறோம். சுற்றுசூழலை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல ஒவ்வொரு தனி மனிதனின் கடுமையாகும். சமூகத்தில் உள்ள அனைவரும் சுற்றுசூழலை பாதுகாப்பதின் மூலம் எதிர்கால தலைமுறையை பாதுகாப்பதாகும் எனவே இன்றைய தினத்தில் சுற்றுசூழலை பாதுகாக்க நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை வி பி ஜி ராம்ஜி என பெயர் மாற்றம் செய்துள்ளது. நூறு நாள் வேலையை நூற்று இருபது நாட்களாக உயரத்துவோம் என்ற பிஜேபி ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளது. குறிப்பாக 2023-24 ஆம் ஆண்டில் 12695 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 10156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் 5828 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 2026-27 ஆம் ஆண்டில் 3923 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு 69 விழுக்காடு நிதி குறைக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராமபுற மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியது பெண்களின் வளர்ச்சிக்கு உதவியது எனவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை தமிழ்நாடு அரசு பெற்றுத் தர வேண்டும். தமிழ்நாட்டில் தவெக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். குறிப்பாக மகளிர் உதவித்தொகை உயர்வு, தாய்மாமன் சீர் போன்ற வற்றை வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டம் பி. துரிஞ்சப்பட்டியில் அரசு மாதுபானகடை வழிபாட்டு தளம் அரசு பள்ளி பொதுமக்கள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் பெண்கள் மாணவிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக மதுக்கடை உள்ளது. இந்த கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

