கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல்.
தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், உத்தரவின்பேரில் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக முக்கிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளபட்டதில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 நபர்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 1102 மது பாட்டில்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6 நபர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சந்தை மது விற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

