தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர்
சி ஜோஷப் விஜய்க்கு
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்த்து.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம்
தியாகி ஆர் பச்சாகவுண்டர் நினைவு படிப்பகத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வெ. பை . மாதையன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ பிரதாபன் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்தும், இதில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் குறித்தும் விரிவான முறையில் பேசினார்
பின்னர் இதன் மீது நிர்வாகக்குழு உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன்,மாவட்ட பொருளாளர் ஈ. அலமேலு,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி .இரவி,ஜி. பச்சாகவுண்டர், ஜி .ராஜகோபால்,கே. லட்சுமணன்,எல் .சி .கிருஷ்ணன், வி செல்வம், ஜி சம்பத் ஆகியவர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு 17 வது சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து கடந்த 04-05-2026 வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் வெளி வந்த முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருந்தது இது தமிழ்நாட்டின் ஐனநாயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்று மக்கள் அச்சமடைந்திருந்த நிலையில்
108 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற சி ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில்
தமிழ்நாட்டின் நலன் கருதியும்
ஆளுனர் ஆட்சி வராமல் தடுக்கவும்,
மீண்டும் தமிழ்நாடு தேர்தலை சந்திக்காமல் இருக்கஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்ச்சிஸ்ட்)
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலா இரண்டு உறுப்பினர்களான முறையில் இருக்கும் எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன்
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற
சி ஜோசப் விஜய்க்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட நிர்வாகக்குழு தெரிவித்துக் கொள்வதுடன்
தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்க-ஆளுனர் ஆட்சியை தடுக்க
தவெக விற்கு ஆதரவு தெரிவித்த
இந்திய தேசிய காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்ச்சிஸ்ட்)
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சின் தருமபுரி மாவட்ட நிர்வாகக்குழு சார்பில் பாராட்டுகளையும்-வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது,
தருமபுரி மாவட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு எற்படடுத்தும் வகையில் தொடர்ந்து மக்களிடம் அரசியல் பரப்புரை செய்யும் வகையில் அரசியல் கொள்கை விளக்க கூட்டங்களை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சிநடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

