அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.இதனை ஆய்வு செய்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ்டூ தேர்வில் கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது மாநில அளவில் கடந்தாண்டு 13 வது இடத்திலிருந்தது இவ்வாண்டு 30 வது இடத்திற்கு சென்று விட்டது.இந்த தேர்ச்சி விகிதம் 1.76 குறைந்துள்ளது அதே போல் 18,514 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 1,205 மாணவ-மாணவியர்கள் தேர்ச்சியடைவில்லை ,
தருமபுரி மாவட்டத்தில் இருக்கும்175 மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பள்ளிகள் 108 ஆகும் தனியார் பள்ளிகள் 67 இதில் 31 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆனால் அரசு பள்ளிகள் 8 மட்டுமே 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளாகும் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறதா பள்ளிகளை மாவட்ட நிர்வாகம் மாவட்ட கல்வித்துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள், பிளஸ்டூ பாடப்பிரிவு ஆசிரியரியர்களை ஆய்வு செய்வதுடன் இப்பள்ளிகளின்கல்வி மேலாண்மைக் குழு,பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவைகள் முறையாக அரசு விதிமுறைப்படி செயல்படுகிறதா என்று ஆய்வு செய்து மாற்றி அமைக்க வேண்டும் மேலும் வருகின்ற கல்வியாண்டில் 108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்டூ மாணவர்கள் முழுமையாக தேர்ச்சியடைய செய்ய உரிய முறையில் திட்டம் வகுத்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ பிரதாபன் கேட்டுக் கொண்டுள்ளார்,

