தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
தமிழ்நாடு முழுவதும் கடந்த 23.04.2026 அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து வரும் 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் பொது மக்களிடையே தேர்தல் பதட்டத்தை தணிக்கும் வகையில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கி – ராஜபேட்டை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன். கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

