தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 04.05.2026 அன்று தருமபுரி வட்டம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரெ.சதீஸ் நேரில் பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைக்காக, தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் என மொத்தம் 70 மேசைகளும், வாக்கு எண்ணிக்கை மேற்பாற்வையாளர் தலா 14 வீதம் மொத்தம் 70 நபர்களும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் தலா 14 வீதம் மொத்தம் 70 நபர்களும், நுண்ணாய்வு பார்வையாளர் தலா 14 வீதம் மொத்தம் 70 நபர்களும், மேற்பார்வையாளர் மேசையில் வாக்கு எண்ணிக்கை உதவியாளர் 5 நபர்களும், நுண்ணாய்வு பார்வையாளர் 10 நபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தபால் வாக்கு எண்ணிக்கைக்காக பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தலா 5 மேசைகள், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் தொகுதிகளுக்கு தலா 6 மேசைகள் என மொத்தம் 28 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மேற்பாற்வையாளர் 28 நபர்களும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் 56 நபர்களும், நுண்ணாய்வு பார்வையாளர் 28 நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளது. 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

