1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
சென்னை மைலாப்பூரில் சி.எஸ்.ஐ. செயின்ட் எப்ஸ் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடியில், திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வாக்கு செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கனிமொழி கருணாநிதி எம்.பி.; தமிழகம் முழுக்க செய்த சுற்றுப்பயணம் குறித்தும், தேர்தல் குறித்தும் அவரிடம் கேள்விக்கு, மக்கள் நிச்சயமாக ஒரு தெளிவான முடிவை எடுப்பார்கள். நான் மக்களை தொடர்ந்து சந்தித்ததன் அடிப்படையில் சொல்கிறேன், உறுதியாக திமுக ஆட்சி தொடரும் என்று மிகவும் நம்புகிறேன். நான் இத்தனை தொகுதிகள் நிச்சயமாக வெல்வோம் என்ற எண்ணிக்கைக்குள் போக விரும்பவில்லை, ஆனால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி நிச்சயம் சிறப்பான ஒரு வெற்றியை பெறும் என்றார்.

