நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மரு. டி. என். வி. எஸ். செந்தில் குமார் காரியமங்கம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
அப்போது அவர் பேசியதாவது :
காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்ட அள்ளி, பிக்கனஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு வீடு இலவச வீட்டுமனை பட்டா கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மக்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பிரச்சாரத்தின் போது தொகுதி பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தொகுதி பார்வையாளர் டி.அரியப்பன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொருளாளர் முருகன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோபால், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

