காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது . அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தனியார் மண்டபத்தில் சந்திரா டெய்லரிங் இன்ஸ்டிடியூட் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிறுவனத்தின் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சந்திரமோகன் மற்றும் மாவட்ட தொழில்மைய மேலாளர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்கள் குறித்தும் அவர்களின் தற்போதைய வளர்ச்சியானது தேசிய அளவிலும், உலக அளவில் பெண்கள் தங்களை எவ்வாறு தங்களது துறையில் நிலைநாட்டி வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் சாதித்து தங்களது துறையில் வளர்ச்சி கண்ட பெண்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

