நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு
2025-26 ஆம் ஆண்டில் இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலையில் இன்று தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து 2025-26 ஆம் ஆண்டில் இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமம், நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 16.02.2026 இன்று முதல் 26.05.2026 வரை 100 நாட்களுக்கு முறை வைத்து அதாவது முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும் அடுத்த 5 நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு, பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் 7 நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறந்துவிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அரசின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகாவதி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தைக் கொண்டும், பென்னாகரம் வட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் 16.02.2026 இன்று முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்திலுள்ள 1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
எனவே, விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்குடன் செயல்பட வேண்டுமேன கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

