போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும்.
ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை
Bachelor of Veterinary Science (B.VSc) படிக்காத கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக விவசாயிகளிடமிருந்து 30.01.2026 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
B.V.Sc படித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பேரவையில் (Tamil Nadu State Veterinary Council) பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும் என்பதே அரசு விதியாகும். போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். கால்நடை வளர்ப்போர்கள் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் அல்லது அரசு கால்நடை நிலையங்களை மட்டுமே அணுகி தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டும். மேலும், போலி கால்நடை மருத்துவர்களை அணுகி கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவது தவிர்க்கப்பட்டு, விழிப்புடன் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கால்நடை வளர்க்கும் விவசாய பெருமக்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ். கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

