தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவாக பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் (09.02.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை, தொடர்ந்து, தருமபுரி கேபிஜே மஹாலில் தருமபுரி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை காணொலி காட்சி வாயிலாக ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் கலந்து கொண்டு, பார்வையிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து, உணவு அருந்தி, காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களை (டிபன் பாக்ஸ்) வழங்கினார்கள்.
மேலும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியான “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்”. என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வாசிக்க அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர மன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், நகராட்சி ஆணையர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ், கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ம.இராஜசேகரன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

