அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தர்மபுரி நெசவாளர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 30 ஆம் தேதி சுப முகூர்த்த கால் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவானது கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் தனபூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் எடுத்தல் முளைப்பாலிகை ஊர்வலம் மகா தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கலச தீர்த்தத்தை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நாளான இன்று யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தத்தை சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க எடுத்துச் சென்று கோபுர கலசத்திற்கு ஊற்றி குடமுழுக்கு நன்னீராட்டு விழா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை மனுர்குல தெலுங்கு தேவாங்கர் சமூகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

