தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல்.
தருமபுரி நகரின் மையப்பகுதியில் பி.ஆா்.ராஜகோபால் பேருந்து நிலையம் 5.75 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி சாா்பில் 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனால் திறந்துவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பலமுறை மேம்பாட்டு பணிகள், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடா்ந்து பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து ஒசூா், சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், சென்னை, வேலூா், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நகர மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, போதிய வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கவும், நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை மாற்றி வேறு இடத்தில் புதிதாக கட்டப்படும் என தருமபுரி நகராட்சி நிா்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

இதைத்தொடா்ந்து தருமபுரியில் கடந்த 2017-இல் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் இப்புதிய பேருந்து நிலையம் அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு நிதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் என அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
தனியார் பங்களிப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு வியாபரிகள் பொதுமக்கள் , விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நகராட்சிக்கு நடத்த வேண்டிய பேருந்து நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது நகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும். என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்
. எதிர்ப்பை மீறி நகராட்சி நிர்வாகம் தருமபுரி பென்னாகரம் சாலையில், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஏதுவாக 10 ஏக்கா் தனியாா் நிலம் நகராட்சி வசம் பத்திரப் பதிவு செய்து ஒப்படைக்கப்பட்டது.
அந்த இடத்தில் ரூ. 39.14 கோடியில் தருமபுரி நகராட்சிக்கு தனியாா் வழங்கிய நிலத்தில் அரசு தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் புதிய புறநகா் பேருந்து நிலைய கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக (வியாழக்கிழமை) திறந்துவைத்தார்.
திறப்பு விழா முடிந்தபின்பு அனைத்து அரசு மற்றும் தனியாா் புறநகா் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு ஒருநாள் முன்புதான் மாவட்ட நிர்வாகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். புதிய பேருந்து நிலையம் திறந்த அன்றே பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் திறப்பது மற்றும் நடைமுறை குறித்து பேருந்துநிலையம் திறப்பதற்கு முன்தினம் மாலை மாவட்ட நிர்வாகம் ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியிட்டது.
புதிய பேருந்து நிலையம் திறப்பால் நகர பேருந்து உள்ளிட்ட அனைத்தும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் சென்றுவிட்டதாகவுகம் அதனால் தருமபுரி நகரத்திற்குள் வருவதற்கு உரிய பேருந்துகள் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பழைய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்க்குமான தொலைவு சுமார் 5 கிலோ மீட்டர் ஆகும். தருமபுரி நகர போருந்துநிலையத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் மாணவர்கள் அரசு ஊழியர்கள் என பேருந்துகளை தேடி சிரமப்பட்டனர். வெளியிரிலிருந்து தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்குள் இறக்கி விடப்பட்டவர்களுக்கு தருமபுரி நகரத்திற்குள் வர பேருந்து இல்லாமல் தத்தளித்தனர்.
மேலும் தருமபுரி நகரத்திற்குள் உள்ள பழைய பேருந்து நிலையத்தினுள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள், சாலையேர பழக்கடை வியாபரிகள் என 250 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. பேருந்து நிலையம் மாற்றத்தால் வருமான மின்றி தவித்து வருகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கடை எடுத்து நடத்த முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து பழைய பேருந்து நிலைய வியபாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பி. என். வெங்கட்டேஷ் , பாமக சிறுபான்மை நல மாவட்ட தலைவர் கே.சலீம்,வியபாரிகள் சங்க தலைவர் பாபு ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் மாவட்டக்குழு உறுப்பினர் டி. எஸ். ராமச்சந்திரன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் எஸ். நிர்மலாராணி ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்து தங்களின் கோரிக்கைகள் எடுத்துரைத்தனர். பழைய பேருந்துநிலையவியாபரிகளின்வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் ஊர்களான திருப்பத்தூர், அரூர் பாப்பிரெட்டிபட்டி,சேலம்,திருவண்ணாமலை ஆகிய ஊர்களின் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி இயக்க வேண்டும். என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

