பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பென்னாகரம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ அழகேசன் தலைமையில் நடைபெற்றது,
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் கலந்துக் கொண்டு இன்றைய அரசியல் நிலைமைகள், நடைபெற்ற வேலை அறிக்கை மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி .மாதையன்,சி. பாலன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி .இரவி,ஜி. பச்சாகவுண்டர்,சக்திவேல்,வெ .பை. மாதையன்,ஜி .சம்பத் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துகள் தெரிவித்து பல்வேறு முடிவுகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
முன்னதாக கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கொண்டகர அள்ளி லட்சுமணன் மறைவிற்கும், பழங்குடி மக்கள் சங்க செயலாளர் சேலம் பரமசிவம் மறைவிற்கும்,குடியாத்தம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லிங்கமுத்து மறைவிற்கும் மாவட்ட நிர்வாகக்குழு அஞ்சலி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும் தருமபுரியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் துவக்கப்பட்டுள்ளது இது வணிகமயமாகத்தினை முக்கியத்தும் கொடுத்து துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சேவை என்பது இரண்டாவதாக இருக்கின்றது, மேலும் தருமபுரி நகர நான்கு முனை சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டும்,
தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் இடமாற்றம் ஏற்பட்டதால், பழைய புறநகர பேருந்து நிலையத்தினை நகர பேருந்து நிலையமாக்கவேண்டும்,நகர பேருந்து நிலையத்தினை முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வகையில், தியாகி எம்டன் தீர்த்கிரியார் திடலாக மாற்றி,கலை கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும்,அரசு விழாக்கள்,பொது நிகழ்சிகள்,அரசியல் கட்சிகள் நிகழ்சிகள் நடத்தும் வகையில் உருவாக்க வேண்டுமாய் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தினை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு கேட்டு கொள்வதுதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
சென்னை கன்னிமார நூலகத்தில் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் முழு உருவ சிலை அமைத்து திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி-பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
பென்னாகரம் நகரில் நாய் தொல்லை கட்டுபடுத்த வேண்டும்,பென்னாகரம் நகரையும் வன விலங்கான யானை அடிக்கடி கிராமபுறத்திற்கு வருவதனை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பி.அக்கராகரத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.பென்னாகரம் வட்டாரம் பருவதன அள்ளி கிராம ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள சிறு தொழில் வளர்ச்சி தொழில் பேட்டை மேம்படுத்தி பென்னாகரம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சிறு தொழில் வளர்ச்சி பேட்டையை மேம்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

