சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் திருவுருவச் சிலை சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலகத்தின் வாயிலில் 85 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின திறந்து வைதது அச்சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர்கள் எ.வ.வேலு,சேகர் பாபு , காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கு.செல்வப்பெருநதகை,மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்,முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்றனர்

