புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு
புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட முதல் மாநாடு தருமபுரியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குமாவட்டஅமைப்பாளர்எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.தேவராஜ் முன்னிலை வகித்தார்.பொது செயலாளர் மு.ராஜா(எ) ஆசிர்வாதம்,தமிழ்நாடு மாநில அமைப்பாளர் ஏ.ஆரோக்கியம்,
ஆர்ஒய்எப் மாநில பொது செயலாளர் ஆ.ஜேக்கப்ஸ்டேன்லி ஆகியோர் இன்றைய அரசியல் நிகழ்வுகள்,2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள்.
மாநாட்டில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் தண்ணீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நல்லம்பள்ளி பஸ் நிலையத்தில் கழிவறை வசதியை அமைத்து கொடுக்க வேண்டும்.
பாளையம்புதூர் பகுதியில் விபத்துகளால் உயிர் இழப்புகளை தடுக்கும் வண்ணம் மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்.
தருமபுரி பஸ் நிலையம் அருசில் உள்ள பழக்கடைகளில்,பொது மக்களை ஏமாற்றும் விதமாக பழங்களை குறைவாக எடை போட்டு மோசடி செய்து விற்பனை செய்யும் வியபாரிகள் மீது நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்ச நாயக்கன்தண்டா கிருஷ்ணாகவுண்டனூர் கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.சிப்காட் தொழில்பேட்டை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் தருமபுரி மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம்,ராஜேஸ்,முரளி,முனிராஜ்,சிவலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு )சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் பொது கூட்டம் நடைபெற்றது.

