தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்
தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 31ம் தேதி பிப்ரவரி 1ம் தேதி ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இரைக்கொல்லி பறவைகளின் இன வகைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை நிலையை மதிப்பீடு செய்யும் வகையில் மேற்படி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் இதற்காக மொத்தம் 14 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜனவரி 31ம் தேதி இரவு நேர வாகன ஆய்வும். பிப்ரவரி 1ம் தேதி பகலில் வாகன மற்றும் நடை ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் 40க்கும் அதிகமான வனத்துறை பணியாளர்கள், 30க்கும் அதிகமான பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ / மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்றது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. மேலும் கணக்கெடுப்பின் செயல்திறன் மற்றும் உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக முன் கூட்டியே Whatsapp (கட்செவி செயலி) குழுக்கள் உருவாக்கப்பட்டு, கணக்கெடுப்பு காலத்தில் பயனுள்ளதாக பயன்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு கணக்கெடுப்பு குழுவிலும் வனத்துறை பணியாளர்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் இரைக்கொல்லி குறித்த நிபுணர்கள் இடம்பெற்று, தங்களுக்குரிய கிரிட்களில் முறையாக கண்காணிப்பு செய்து பதிவுகளை மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்பில் தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் மூலம் பொரிப்புள்ளி ஆந்தை, கொண்டை பாம்புண்ணிக் கழுகு உள்ளிட்ட 26 வகைகளில் 172 எண்ணிக்கையில் இரைக்கொல்லி பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து கண்காணிப்புகளும் வோக்ஸ்மேப் மற்றும் தரவுத்தாள்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி இரைக்கொல்லி பறவை இனங்களின் போட்டோக்கள் (புகைப்படங்கள்) மற்றும் கண்காணிப்பு பதிவுகள் சேகரிக்கப்பட்டு, விரைவில் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளதாக தருமபுரி மாவட்ட வன அலுவலர். தெரிவித்துள்ளார்.

