தருமபுரியில் 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கியதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நலத்திட்டப் பயன்கள் நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (04.02.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.தருமபுரி மாவட்டத்தில், முதல்வரின் முகவரி துறையின் மூலம் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 1 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 10 வட்டாரங்களில் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் 2025 -ம் ஆண்டு ஜீலை மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி, 2025 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 -ம் தேதி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் 176 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 176 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,90,312 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் இதர திட்டங்களையும் சேர்த்து 1,31,904 மனுக்கள் ஏற்கப்பட்டு,அம்மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.காயத்ரி (தருமபுரி), திரு.செம்மலை (அரூர்), தருமபுரி நகராட்சி ஆணையர் இரா.சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

