தருமபுரியில் சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், புகைப்படக் கண்காட்சி தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமகள் தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிபதி ராஜா, போக்ஸோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி அசின் பானு, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி. முதன்மை சார்பு நீதிபதி ஞானபாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி கலைவாணி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி விபிசி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்,சார்பு நீதிபதி தமயந்தி உட்பட அனைத்து குற்றவியல் நீதிபதிகள், உரிமையல் நீதிபதி மற்றும் நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் அழகுமுத்து மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட எதிர்காப்பு முறைமை வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதி,தலைவர், பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே குழந்தை திருமணம் இல்லாத இந்தியா, சமரசம் நாடுவீர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

