சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 – ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் தருமபுயில் உள்ள அக்கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக்கூட்டம் நகர தலைவர் ஏ. சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் என்.சுபேதார்மாவட்ட செயலாளர் டி. பி.பைரோஸ் மாவட்ட துணை தலைவர் கே. ஷாஜகான்,எஸ் எம் ஐ மாவட்ட செயலாளர் எப். ரமீஸ்,எஸ்எம்ஐ மாவட்ட பொருளாளர் பி. பர்வேஸ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் ,முஹம்மத் ரபி, பர்மான் ,முபாரக் ,ரஷீத் கான் , ஏஜாஸ் கான் ,ஹீரா ஜான்கமால் ,முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் சுக்கூர்பாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

