தருமபுரியில் கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினவிழா
தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை, தருமபுரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கிறிஸ்மஸ் விழா, சிறுபான்மையினர் தினவிழா தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கட்அ அருகே உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை தமிழ்நாடு அரசு மாநில சிறப்பு பிரதிநிதி ஏ. இலியாஸ் தலைமை வகித்தார்.
தருமபுரி மாவட்ட முஸ்லிம் உதவும் சங்க கெளரவ தலைவர் ஜனாப். யாரப்சாஹெப் வரவேற்றார். முஸ்லிம் மகளிர் உதவி சங்க பொறுப்பாளர ஜீலான், தருமபுரி மாவட்ட அரசு காஜியார் மெளலானா முப்தி, ஹாஜி, எம். பலே கரீம், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபைகள் கூட்டமைப்பு தலைவர் பேராயர் டாக்டர் எம். பிலிப், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். கிரைஸாமேரி, ஒன்றிய செயலாளர் தமிழ்மணி சிறுபான்மை நலக் குழு மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்வாணன், எம். ஏ. சிக்கந்தர் சாஹெப், ஏ. சிராஜுதீன், இளம்பிறை சுலைமான், நிஜாமுதீன், ஜே. கலாம், ஏ. அலாவுதீன், ஆகியோர் பங்கேற்று பேசினர். கிருஸ்துமஸ் மற்றும் சிறுபான்மையினர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர்கள்பேசினர்.

மேலும் இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கேக் மற்றும்இனிப்பு வழங்கினர். முஸ்லிம் மகளிர் உதவும் சங்க இணை செயலாளர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.

