மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஏரி வலை தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புசட்டத்தினைமாற்றிவளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்று வாழ்வாதரத்திற்கானதிட்டம் (கிராமபுறம்)என்றுநடைபெற்றநாடாளுமன்றமக்களவை,மாநிலங்களவையில் நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டியும்,பழைய சட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தினையே தொடர்ந்து அமுலாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஏரி வேலை தொழிலாளர்கள்சங்கஒருங்கிணைப்பாளரும் இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள்தலைவருமானஜெ.பிரதாபன் தலைமை வகித்தார். சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஜி. மாதையன், தொழிற்சங்க தலைவர் சுந்தரம்மற்றும்ஜி.பச்சாகவுண்டர்,ஜி.ராஜகோபால்,வெ.பை .மாதையன், எல்.சி.கிருஷ்ணன்,அலமேலு,காளியம்மாள்,இலட்சுமணன்,அம்பேத், பச்சியப்பசாமியார்,ஜி.சம்பத்,சின்னசாமி,நாகராஜன்,மாது,செந்தில்,பெருமாள், மற்றும்திரளானஏரிவேலைதொழிலாளர்கள்கலந்துக்கொண்டனர்ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் அவர்களை சந்தித்து சங்க தலைவர்கள் மனு அளித்தனர்.

