ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை.
ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
மனிதநேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் என். சுபேதார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் என். சுபேதார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை விமான நிலையம் அருகே 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில், ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் (டிச. 16) அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.

பல ஆண்டு கால இஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஹஜ் கமிட்டி இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ ஆகியோருக்கும் மற்றும் இதற்கு பரிந்துரை செய்த மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவுக்கும் மனிதநேய மக்கள் கட்சி தருமபுரி மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

