முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா:மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.12.2025) தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் முனைவர் பெ.பழனியப்பன் – ரோஜா தம்பதியரின் மகன் எழில்மறவன் மற்றும் வெ.சரவணன் – சாந்தி தம்பதியரின் மகள் கிருத்திகா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

இம்மணவிழாவில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன் குமார், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

