தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) தருமபுரி மாவட்ட முதலாவது பிரதிநிதிகள் மாநாடு தருமபுரி சந்திரா ஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் கொ. கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில நிலைக்குழு உறுப்பினர் கே. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) தமிழ்நாடு மாநில 12 ஆவது மாநாடு தூத்துக்குடியில் 12,13,14, ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தருமபுரி மாவட்ட பிரிதிநிதகளாக பங்கேற்க்க சி. முருகன், ராஜூ, சிவராமன், ஜி. சாலம்மாள், சி. அம்மணி, ஆர். ராமதிலகன் உள்ளிட்டோரும் மாநாட்டில் பார்வையாளராக பி. இளையசெல்வம், ஜி. ராகுல் டிராவிட், எஸ். மாதேஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றி தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தருமபுரி சிப்காட் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் வட்டந்தோறும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை துவக்க வேண்டும். தருமபுரி- மொரப்பூர் ரயில்திட்டபணிகளை விரைந்து முடிக்கவேண்டும். நியாய விலைகடைகளில் மாதம் முழுவதும் ரேசன் பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குதிருட்டுக்கு வழிவகுக்கும் எஸ் ஐ ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

