குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (14.11.2025) பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், பாளையம்புதூர் குழந்தைகள் மையத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பில் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சி நிலைகள், எடை, உயரம் குறித்த விவரங்கள் போன்றவற்றை கூட்டப் பொருளாக கொண்டு குழந்தைகளின் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் கலந்துரையாடி, குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து, அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா,மாவட்டஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.பவித்ரா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, நல்லம்பள்ளி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

