தருமபுரியில் ஜவகர்லால் நேரு அவர்களின் – 156 வது பிறந்தநாளில் அவரது உருவ சிலைக்கு இந்திய ஐக்கியகம்யூனிஸ்ட்கட்சி மாலைஅணிவித்து மரியாதை
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய குடியரசின் முதல் பிரதமர்,சுதந்திர இந்தியாவை உருவாக்கி சிற்பி, மனிதர் குல மாணிக்கம், அணி சேரா நாடுகள் உருவாக்கியவர், ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கி பசுமைப் புரட்சி,வெண்மை புரட்சி,நீல புரட்சி கொண்டுவந்தவர்பங்களாக்கள்,ஹீராகுட்அணைகள்,பிலாய்,ரூகேலா,பத்தராவதி இரும்புஆலைகளை உருவாக்கிய ஜவகர்லால் நேருவின் 156 வது பிறந்த தினத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் தருமபுரி சாலை வினாயகர்சாலையில்அமைந்துள்ளஜவகர்லால் நேரு அவர்களின் திரு உருவ சிலைக்கு கட்சின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில் மாலை அணிவித்துமரியாதைசெலுத்தினார்கள்.இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன்,சி .பாலன்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என் .பி .ராஜி,ஜி .சம்பத் மற்றும்சாக்கன்,மாது,செந்தில்,ராஜா,சத்தியமூர்த்தி ஆகியவர்கள் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்தினார்கள்

