மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

Social Vision
Last updated: 2025/11/13 at 11:06 AM
Social Vision
Share
3 Min Read
SHARE

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

பட்டியில் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்பலமுறை மனு கொடுத்தும், மனைபட்டா வழங்காமல், அலைக்கழித்து வரும் நிர்வாகத்தினை கண்டித்தும் தகுதியான அனைவருக்கும் மனை பட்டா வழங்கும் வரை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு
காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர 3 முதல்2025 நவம்பர் 10 ம் தேதி வரை வரை மனைபட்டா கேட்டு மனு கொடுத்த தலித், அருந்ததியர், பழங்குடியினர், போயர்இன மக்கள் வடடாடசியர அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுக்களின் மது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரூர் வட்டம், செல்லம்பட்டி பஞ்சாயத்து கீழானூர் கிராமத்தில் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலம், சர்வே எண் : 65/2-ல் 2.80.0 ஹெக்டர் நிலத்தினை வகை மாற்றம் செய்து, கீழானூர் ஆதிதிராவிடர், கொத்தனாம்பட்டி பழங்குடியினர் இனமக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். மாம்பட்டி ஊராட்சி, கைலாயபுரம் கிராம சர்வே எண் 25/2ஏ, 2-பி யில் 127 அருந்ததியின குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

சட்டையம்பட்டி கிராமம், சின்னபண்ணிமடுவு சர்வே எண் : 46/1, 52/1 பி-யில் 140அருந்ததியின் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்கவேணடும். மத்தியம்பட்டி வருவாய் கிராம சர்வே எண் 20/2-ல் கைலாயபுரத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் 60 குடும்பங்களுக்கு 1998-ல் கொடுத்த பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து சிட்டா வழங்க வேண்டும்.சந்திராபுரம் வருவாய் கிராமத்தில் வீடு கட்டி வாழ்ந்து வரும் 30 இருளர் இன குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
இட்லப்பட்டி கிராம புல எண் 15/1-ல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் 7 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவினை அளந்து அத்து காட்டு, மீதமுள்ள மனு கொடுத்த 12 குடும்பங்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

கே. வேட்ரப்பட்டி பஞ்சாயத்து, H.ஈச்சம்பாடியில் 40 ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் சர்வே எண் 39/2 தொம்பர் இன மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும்.
வேடகட்டமடுவு பஞ்சாயத்து மேல்செங்கப்பாடி ஆதிதிராவிடர் மக்களுக்கு டி.ஆண்டியூர் கிராம சர்வே எண் 29/6-ல் உள்ள தரிசு நிலத்தில் மனு கொடுத்த 64 பேருக்கும் பட்டா வழங்க வேண்டும்.

சிட்டிலிங் பஞ்சாயத்து, கத்திரிப்பட்டி நாட்டான் வளவு கம்மாளை ஆகிய கிராமங்களில் சர்வே எண் 691, 67, 21/2-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மலைவாழ் மக்களுக்கு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும்.
எல்லபுடையாம்பட்டி பஞ்சாயத்து, கெளபாறை கிராம சர்வே எண் 81/1-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் 80 குடும்பங்களுக்கு வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும். அரூர் வட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏழை மக்களுக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட செயலாளர் கே. குமரேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் போராட்டத்தை துவககிவைதது பேசினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் மாநில செயலாளர் எம். முத்து, மாநிலதுணைத்தலைவர் ஜி. கணபதி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கருப்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஈ. கே. முருகன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. லெனின், நிர்வாகிகள் பி. சொக்கலிங்கம், பி. வீரப்பன், ஜடையாண்டி, சி. வேலாயுதம், வாலிபர் சங்க வட்ட செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் பங்கேற்று வாழத்தி பேசினர். காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

TAGGED: அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.
Social Vision November 13, 2025 November 13, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024
தருமபுரி-குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு

March 6, 2024
இந்தியா

கேரளா நிலச்சரிவு :முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 

July 30, 2024
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 5 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
தமிழ்நாடு

காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

July 24, 2024
தமிழ்நாடு

காரிமங்கலத்தில், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு .

June 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?