நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து உள்ள பண்டஅள்ளி யில் தெருநாய்கள் கடித்து குதறியதில் வீட்டில் கட்டி இருந்த 10 ஆடுகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானம் விவசாயி ஆன இவர் தனது வீட்டில் 10 ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 3 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ஞானம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டுக்கொட்டைக்கு சென்று பார்த்தனர். அங்கு 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.நாய்களை துரத்திவிட்டு சென்று பார்த்தபோது 10 ஆடுகள் இறந்து கிடந்தன. இவற்றின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் அதிகயளவு தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் அனைத்து வீடுகளிலும் ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அடிக்கடி இவற்றை கடித்து விடுவதாகவும் குழந்தைகளை கூட துரத்துவதாகவும் வேதனை தெரிவிக்கும் மக்கள், இறந்த ஆட்டின் உரிமையாளருக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

