தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட முதல் மாநாடு தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின்மாவட்ட அமைப்பாளர் பி. பொண்ணு சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ. விஜய முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன், மாவட்ட தலைவர் எம். குமார், மாவட்ட பொருளாளர் சி. வஞ்சி, மாவட்ட துணைத்தலைவர்கள் கே. என். மல்லையன், எஸ். தீர்த்தகிரி, மாவட்ட துணை செயலாளர் கே. அன்பு, பி. சக்கர வேல், ஆ. ஜீவானந்தம் ஏ. நேரு. ஆர். சக்திவேல், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக கே.எல்லப்பன், செயலாளர்.பி.பொண்ணுசாமி,பொருளா ளர்.பி.பி.ராஜா உள்ளிட்ட 18 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர்.
வேர்ப் புழு, கருந்தலை புழுக்கள், மஞ்சள் வாடல், சுருள் வெள்ளை ஈக்கள்,ஊசி புழுக்கள், என வரிசையாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகி தென்னை மரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனவே தென்னை விவசாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து, உரம், பூச்சி மருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும்.
தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து தேங்காய் கொள்முதலில் லாபக்காய் என்ற பெயரில் 100க்கு 4 முதல் 15 வரை தேங்காய் எடுப்பதை தடுத்திட வேண்டும். தென்னையைத் தாக்கும் நோய்களைத் தடுப்பதற்கு தென்னை வளர்ச்சி வாரியம் புதிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்
ஒன்றிய அரசு தென்னை சார்பு பொருட்களை ஏற்றுமதி செய்ய மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் காயர் போர்டில் நடைபெறும் முறைகேடுகளை களைய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு ஆகிய இடங்களில் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

