கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மகிளா காங்கிரஸ் சார்பில் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவி ரோஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் பூங்கொடி, மாவட்டத் துணைத் தலைவி லட்சுமி, மாவட்ட பொருளாளர் முருகம்மாள் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

