அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 10-லட்சமும் உதவியாளர்களுக்கு ரூபாய் 5-லட்சமும் வழங்க வேண்டும் என்ற குஜராத் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவேண்டும்.
பணி ஓய்வுக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியமாக ரூபாய். 9000 அகவிலை படியுடன் வழங்க வேண்டும்.
மே மாத கோடை விடுமுறையை ஒரு மாத காலமாக வழங்க வேண்டும்.
93-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிபந்தனை இன்றி உடனடியாக நிரப்ப வேண்டும். செல்போன் வழங்காத மாவட்டங்களுக்கு 5-ஜி அலைபேசி 5-ஜி சிம் கார்டு வைபை இணைப்பு வழங்கி எப் ஆர் எஸ் முறையை எளிமைப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி. கவிதா, பொருளாளர் தெய்வானை, மாவட்ட நிர்வாகிகள் சத்யா, நிர்மலா, ரீத்தா , ஜெயந்தி, காளீஸ்வரி, ஜான்சிராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஏ. சேகர் வாழ்த்தி பேசினார்.

