புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2025) தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவில் 39.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், முன்னாள் அமைச்சர் தன பழனியப்பன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதிஷ்,நகராட்சி நிர்வாக இயக்குநர் பி. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

