தருமபுரி சிப்காட் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2025) தருமபுரி வட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 1,733 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும், உட்புறசாலைகள், மழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு மற்றும் இதர பணிகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதிஷ், சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில் ராஜ், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

