டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வென்ற இந்தோனேசியா வீராங்கனைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.
சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த வீராங்கனை ஜானிஸ் ஜென் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிம்பர்லி பிரல் ஆகியோருக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, பாராட்டினார்

