சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில்நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி. பச்சாகவுண்டர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத்தலைவர் ப. கி. பட்டாபிராமன் இன்றைய அரசியல் நிலைகுறித்துவிரிவாகபேசினார், நடைபெற்ற வேலை அறிக்கை -அமைப்பு நிலை அறிக்கை மற்றும் தருமபுரி மாவட்ட வளர்ச்சி கோரிக்கை குறித்து மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபனன் பேசினார்,முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன் அஞ்சலி தீர்மானத்தினை வாசித்தார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் ஈ .அலமேலு,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி .இரவி, ஜிராஜகோபால், ஆர்.இலட்சுமணன்,என்.பிராஜி, அழககேசன்,வெ .பை மாதையன்,வி .செல்வம், எல் .சி.கிருஷ்ணன், மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் சி .சக்திவேல்,எம் குமார், ஜி. சம்பத்,கே .இலட்சுமணன்,எம் முண்ணு,டி தங்கராஜ்,வெஅர்ஜுனன்,ஜெ.காளியம்மாள், சி .பெருமாள்,பாப்பம்மாள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம்,பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம் (SIR) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவிப்பு பாரபட்சமானது அதனால் வாக்காளர் சிறப்புற்று திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு இந்திய தேர்தல் ஆணையத்தின் கேட்டு கொண்டுள்ளது,தருமபுரி மாவட்டம் உருவாகி அறுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் சில அடிப்படையான கோரிக்கையான காவிரி-தெண்பெண்ணையாற்று உபரி நீர்ரேற்றும் திட்டம்,ஏற்கனவே அறிவித்த நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற,தொழில்பேட்டையில் விவசாய சார்ப்பு தொழிற்சாலை துவங்க,வேண்டும்.ஓசூர்-தருமபுரி-சேலம் வரை இருவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்.மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதைபணியைவேகப்படுத்த,வேண்டும்.பழங்குடி கிராமங்களுக்கு தார்சாலை-பேரூந்து வசதி, பி .எஸ் .என் .எல், டவர் வசதி ஏற்படுத்த மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் வருகின்ற 24-11-2025 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

