மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 
மாவட்டங்கள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 

Social Vision
Last updated: 2025/10/29 at 10:54 AM
Social Vision
Share
3 Min Read
SHARE
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொருப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்  நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 057-பாலக்கோடு, 058-பென்னாகரம், 059-தருமபுரி, 060-பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 061-அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன்படி இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது தொடர்பாக இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைவரும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
கால அட்டவணை, வாக்காளர் கணக்கெடுப்பு பணி காலம்  04.11.2025 முதல் 04.12.2025 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள். 09.12.2025, ஆட்சேபனை மற்றும் முறையீட்டு காலம்  09.12.2025 முதல் 08.01.2026 வரை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள். 07.02.2026 ஆகும்இத்தகைய சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 2002-ஆம் ஆண்டில்மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு பின்னர் 23 ஆண்டுகளுக்கு பின்னர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்காக தனிச் செயலியும் உறுவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள 1501 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் முழுமையாக ஈடுபடுவார்கள். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் நியனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கணக்கெடுப்பு படிவங்களை மீண்டும் பெறவதற்கு மட்டும் உதவி செய்வார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர், அவருடைய வாக்குச்சாவடிக்குட்பட்ட தற்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய, வாக்காளரின் விவரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை (இரட்டை பிரதியில்) வழங்குவார். வீட்டில் யார் இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த வீட்டில் இருக்கும் வாக்காளருக்கு அவருடைய உறவு முறையை அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெறுவதற்கு அந்த அலுவலர் மீண்டும் வருவார். வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு மீண்டும் வழங்க வேண்டும். புதிய வண்ணப்புகைப்படத்தை அதற்கான இடத்தில் ஒட்டி வழங்கலாம். கணக்கெடுப்பு படிவத்துடன் ஆவணங்கள் எதும் வழங்க வேண்டியதில்லை. பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலரால்  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கை காலத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். மேலும், கணக்கெடுப்பு படிவத்தில் தவறாக தகவல் வழங்கிய அல்லது தகவல்கள் அளிக்காத வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர் ஒரு அறிவிப்பு வழங்குவார். அதன்மீது வாக்காளர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை செய்து இறுதி ஆணைபிறப்பிப்பார். அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,  தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி (தருமபுரி),.செம்மலை (அரூர்),  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ்
Social Vision October 29, 2025 October 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பிக்கனஅள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 15, 2024
மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி நிலவரம் 

June 4, 2024
மாவட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

March 25, 2024
வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் 62,630 பேர் -Group IV பதவிகளுக்கான தேர்வு எழுதுகின்றனர்.

June 8, 2024
மாவட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ரசீது இல்லாத ரூபாய் 96500 கைப்பற்றப்பட்டது.

March 22, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?