பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை
பாலக்கோட்டில் நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டி கங்கை நீரை ஆற்றில் கலந்து சிறப்பு தீபாரதனை வழிபாடு மற்றும் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் , அன்னை காவேரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர்நிலைகளை பாதுகாத்து குப்பை கொட்டாமல் இருக்கவும், நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டியும் பாலக்கோடு நதியில் கங்கா ஆற்றின் நீரை ஊற்றி சிறப்பாக தீபாரதனை காட்டப்பட்டது. இந்த தீபாரதனை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் நிறுவனர் ராமானந்த பூரி அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஸ்ரீ சங்கர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
பாலக்கோடு நகர பொதுமக்கள் முன்னிலையில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை நடைபெற்றது.மேலும் ஸ்ரீ வேணுகோபால ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

