பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சென்னை கோடம்பாக்கம் பத்மராம் திருமண மண்டபத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10. 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவிதததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 215 இடங்களில் நிவாரண மையங்கள் அமைத்து 110 இடங்களில் உணவு தயாரிக்கும் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 17.10.2025 முதல் 27.10.2025 வரை 701 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 29,686 நபர்கள் பயனடைந்துள்ளனர்.பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 5,38,100 நபர்களுக்கு இதுவரை உணவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் காரப்பாக்கம்.க.கணபதி, மயிலை த.வேலு, அசன்மௌலானா, ஜெ.கருணாநிதி, பிரபாகர் ராஜா, கண்காணிப்பு அலுவலர்கள் சிவஞானம் திரு.விசாகன்,துணை ஆணையர் (பணிகள்) திரு.சிவகிருஷ்ணமூர்த்தி, வட்டார துணை ஆணையர்கள் எச்.ஆர்.கௌசிக்,அஃதாப் ரசூல், நிலைக்குழுத் தலைவர்கள் தலைவர் தனசேகரன். மண்டலக்குழுத் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், நொளம்பூர் ராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், முக்கிய சேவை துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

