தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம் நவம்பர்- 1 சனிக்கிழமை அன்று தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே. அண்ணாதுரை, மாவட்ட தலைவர் சி. முனிரத்தினம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் 42 ஆண்டு காலமாக தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களை தேர்தல் கால வாக்குறுதியில் அறிவித்ததுபோல வாக்குறுதி எண் 313ன் படி காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்
சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியம் ரூ. 2000 என்பது மருத்துவ செலவிற்கு கூட போதுமானதாக இல்லை. சத்துணவு பணியாளர்களின் இந்த நிலையை கருத்தில்கொண்டு குடும்ப ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ. 7850 வழங்க வேண்டும் சத்துணவு திட்டத்தில் உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
சத்துணவு திட்டத்தில் 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவோம் என்று அரசு அறிவித்த அறிவிப்பு கிணற்றில் போட்டகல் போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சத்துணவு பணியாளர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு உடனடியாக பணியமர்த்த வேண்டும்
ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒட்டுமொத்த தொகையினை அமைப்பாளர்களுக்கு 5 லட்சமாகவும் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்
சமையலர் நிலையில் இருந்து 5 ஆண்டுகள் பணிமுடித்த பணியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்குவதை போல சமையல் உதவியாளர்களுக்கும் 10 ஆண்டுகள் என்பதை தளர்த்தி 5 ஆண்டுகளில் சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த ஆண் சத்துணவு பணியாளர்களுக்கு பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 42 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டுமாய கேட்டும்.25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களில் 3 பணியிடமும் இல்லாத நிலையில் சத்துணவு வழங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த மையங்களில் ஒரு சத்துணவு உதவியாளர் பணியிடமாவது பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற உள்ள தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று வெற்றியடைய செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

