மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு
மாட்லாம்பட்டி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மனைபட்டா வழங்க கோரி இக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷிடம் மனு கொடுத்தனர்
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம்,பைசு அள்ளி ஊராட்சிக்கு பட்டது மாட்லாம்பட்டி கிராமம் இங்கு
அரசு(அ) பதிவேடு பதிவு சர்வே எண்: 245 அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறையாக 30 க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு,பெற்றுள்ளனர் மேலும் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நில மற்றவர்கள் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடும்பமாக வசித்துவரும்இவர்களுக்கு பல முறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை
எனவே இங்கு வசித்துவரும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருத்தி குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

