ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
எர்ரன அள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி பாலக்கோடு வட்டம் எர்ரன அள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்துவந்தனர். குடிநீர் வழங்க கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் குடிநீர் வசதியை செய்து கொடுக்கவில்லை இதனையடுத்து இக்கிராம மக்கள் காலி குடங்களுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஜி பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். முத்து வட்டச் செயலாளர் சி.ராஜா, ஆகியோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி. காரல் மார்க்ஸ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. கோவிந்தசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி. நக்கீரன்,என். வரதராஜன், வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் வீ.ரவி,மாணவர் சங்கமாவட்டத்தலைவர், அஜித்குமார் மாற்றுத்திறனாளி வட்டச்செயலாளர்,மாதேஸ் ஆகியோர் வாழத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலருடன் சங்கத்தின் தலைவர்கள் நடத்தியபேச்சு வார்த்தையில் 15 நாட்களுக்குள் குடிநீர் கிடைக்க எடுப்பதாக வாக்குறுதி அளித்ததினர்.

