காவிரி ஆற்றங்கரை நாகமரை அருகே
இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் நாகமரை காவிரி ஆற்றங்கரை அருகில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்துபாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் முழுக்க வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. இதுவரை கண்டறியப்படாத கவனம் பெறாத வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன. பென்னாகரம் பகுதியில் கவனம் பெறாத வரலாற்று சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளில் ‘பென்னாகரம் வரலாற்று மையம் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தஅமைப்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏரியூர் ஒன்றியம் நாகமரை காவிரி ஆற்றுப்படுக்கை மணிக்காரன் கொட்டாய்க்கு அடுத்த பூதிகுண்டு பகுதியில் பெரும் கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக இராம கொண்டஅள்ளி அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்தனர் .அதனைத் தொடர்ந்து பென்னாகரம் வரலாறு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் , கோவிந்தசாமி, தமிழாசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் சந்தோஷ் குமார், தாமோதரன் திருப்பதி ,முருகா, கணேசன், அபில் தேவ் ஆகியோர் அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ‘பூதிகுண்டு ‘ என்ற இடத்தில் பாறையில் பெரும் கற்கால வெண்சாந்து ஓவியம் இருப்பது தெரியவந்தது. இந்த ஓவியமானது சமவெளியில் உள்ள குன்றில் இயற்கையாக அமைந்த குகையின் மேற்பகுதியில் வெண் சாந்து ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த வெண்சாந்து பாறை ஓவியங்கள் குறித்துதருமபுரி மாவட்டதொல்லியல் அலுவலர் பரந்தாமன் கூறியது
பெருங்கற்காலத்தைச் சார்ந்த இந்த வெண்சாந்து பாரைஓவியம் 2500 முதல் 3500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் எனவும். இங்கு உள்ள நான்கு ஓவியங்களில் இரண்டு ஓவியங்கள் அளவில் பெரியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் இறந்து போன இனக்குழு தலைவனை வணங்குவதற்காக வரைப்பட்டிருக்கலாம். மற்ற இரண்டு ஓவியங்கள் சிறிய அளவில் தட்டையாக உள்ளது என்று கூறினார்.மேலும் இந்தபகுதி அமைந்துள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள் கல்வட்டங்கள்,இரும்பு உருக்கிய கசடுகள் மற்றும் கருப்பு சிவப்பு பாணை ஓடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

