மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடுஅரசின்,சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர் (MULTIPURPOSE WORKER) (24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்:17.11.2025விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம்:மாவட்ட சமூகநல அலுவலகம்,பழைய மாவட்ட ஆட்சியர்கூடுதல்கட்டடம்பின்புறம், பழைய மாவட்ட ஆட்சியரகம்,தருமபுரி – 636705.
பல்நோக்கு உதவியாளர் (Multipurpose worker) (24X7) காலிப்பணியிடம் – 01
தகுதிகள்:-
8 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) 10 ஆம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.உள்ளூர் விண்ணப்பதாரராகவும்,மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.இப்பணியிடத்திற்கு 38 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 17.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.

