பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.
தருமபுரி மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு,காரம் தயாரிப்பு கூடங்கள், விற்பனை நிலையங்களில் கண்காணித்து தரம் குறித்த ஆய்வு செய்திடவும், இனிப்பு காரம் மற்றும் உபயோகப்படுத்தப்படும் நெய் இவற்றின் தரம் அறிய மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி ஆய்வு முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் கூடுதல் செயலர் லால்வேணா, உத்தரவிட்டதன் பேரிலும், மேலும் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் இது சார்ந்து இரு தினங்களுக்கு முன்பு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தர்மபுரியில் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்கைலாஷ்குமார், அவர்களின் மேற்பார்வையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார், தலைமையில் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் நேதாஜி பைபாஸ், பாரதிபுரம், கலெக்டரேட், அன்னசாகரம் , சத்திரம் மேல் தெரு மற்றும் ராஜா பேட்டை, செட்டிகரை, மதிகோன்பாளையம் பகுதிகளில் தயாரிப்புக் கூடங்கள், மொத்த விற்பனை நிலையங்கள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் மூலப்பொருட்கள் , சமையல் எண்ணெய் , நெய் தரமானதாகவும் உரிய காலாவதி தன்மை உடையதாக இருக்கவும் செயற்கை நிறமேற்றிகள் இனிப்புகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவும் காரவகைகளில் ஒரு சிலவற்றை தவிர வேறெவற்றிலும் அறவே உபயோகப்படுத்த கூடாது எனவும் தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறம் சுகாதாரம், பேணப்படவேண்டும் . பணியாளர்கள் தன் சுத்தம் பராமரித்தலுடன் உரிய ஆடைகள் அணிந்துள்ளனரா, எனவும் கண்காணிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருத்தல் கட்டாயம் உடன் விதிகளை பினபற்ற வேண்டும். மேலும் இனிப்பு காரவகைகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்பாடு உள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
தயார் செய்த இனிப்பு, கார வகைகள் முறையாக பராமரிக்கவும், பூச்சிகள் இதர தூசுகள் அயற்பொருட்கள் அண்டாமலும், சேராமலும் பின்பற்றிடமும் தயாரிப்பு கழிவு பொருட்கள் முறையாக அகற்றிடவும், மூலப்பொருட்கள் உரிய தேதி,தரமான பொருட்கள் பயன்படுத்திடவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமல் மீதமாகும் சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ(RUCO-REUSED Cooking oil)டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள வழிவகை குறித்து விழிப்புணர்வு செய்தும்,இனிப்பு காரம் தயாரிப்பார்கள் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் சம்பந்தப்பட்ட கடை, தயாரிப்பு வணிகர்களுக்கு வழங்கி கண்டிப்பாக பின் பற்றிட வலியுறுத்தினார்.

சந்தேகத்தின் அடிப்படையில் இனிப்பு மற்றும் கார வகைகள்,நெய் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நியமன அலுவலர் தெரிவித்தார். இன்றைய ஆய்வில் சுகாதாரமின்மை குறை காணப்பட்ட செட்டிகரை டீக்கடை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பேக்கரிக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸும் உடனடி அபராதம் ரூபாய்.2000 விதிக்கப்பட்டது. இதேபோல் விதிமுறைகள் பின்பற்றாத மூன்று கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் ரூபாய்.3000 உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

