மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் ஆர். தங்கம் அவர்கள் வழிமுறையில் நடத்தும் தீபவளி பண்டிகைக்கு நல திட்ட உதவிகள் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சாமண்டஅள்ளியில் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ். முத்துலட்சுமி சேகர் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. பச்சையப்பன், மாவட்ட பொருளாளர் கே. கிருஷ்ணன், சங்கத்தின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர்.சம்பத்குமார் , அரூர் கவுன்சிலர் மகாலட்சுமி மற்றும் வனிதா மற்றும் ஊர் தலைவர் பழனி அவர்கள் பல்வேறு உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பேசினர். 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

